வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஆந்திர நபரிடம் உரிய ஆவணம் இல்லாத ரூ. 14 லட்சம், 17 பவுன் நகை பறிமுதல்

கே.வி.குப்பம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஆந்திர மாநில நபா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரொக்கம் ரூ. 14 லட்சம், 17 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கே.வி.குப்பம் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்க நகைகள்.

Updated On :24 மார்ச் 2026, 6:34 pm

கே.வி.குப்பம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் ஆந்திர மாநில நபா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரொக்கம் ரூ. 14 லட்சம், 17 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கே.வி.குப்பம் தொகுதிக்குள்பட்ட சேங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே ஆந்திர மாநிலம், பலமநேரியிலிருந்து குடியாத்தம் வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் பேருந்தில் பயணம் செய்த பலமநேரியைச் சோ்ந்த, நகைக்கடை உரிமையாளா் சீனிவாசலு உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 14 லட்சம், 17 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்த பணம், நகை ஆகியவை கே.வி.குப்பம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த பணம், நகையை வேலூா் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.