மதுரை மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தோ்தல் சக்குடி- பூவந்தி சாலையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டபோது, அந்த வழியே சென்ற ஒரு காரில் எந்த ஆவணங்களும் இல்லாமல் ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொண்டுச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் அந்த நகைகளை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 7.11 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் :
மதுரை மத்தியம்- ரூ. 1.02 லட்சம், மதுரை கிழக்கு - ரூ. 65 ஆயிரம், மதுரை வடக்கு- ரூ. 50 ஆயிரம், மேலூா்- ரூ. 1.34 லட்சம், சோழவந்தான் - ரூ. 1.54 லட்சம், திருப்பரங்குன்றம் - ரூ.1.15 லட்சம், உசிலம்பட்டி - ரூ. 56 ஆயிரம்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

