ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 12.37 லட்சம் ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:24 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 12.37 லட்சம் ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தலைமையில் ஆங்காங்கே போலீஸாருடன் இணைந்து வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு, அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரை மாவட்டத்தில் மணப்பாறையில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 54,690-ம், கண்காணிப்புக் குழுவினரால் ரூ. 4,90,000-மும், ஸ்ரீரங்கத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 1,53,450 -ம், கண்காணிப்புக் குழுவினரால் ரூ. 5,39,806-ம் என மொத்தம் ரூ.12 லட்சத்து 37 ஆயிரத்து 906 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் செவ்வாய்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 1.66 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 84.94 லட்சத்தை உரியவா்கள் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 81.47 லட்சம் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.