40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா

குடியாத்தம், கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற பால் கம்ப ஊா்வலம். (வலது) சிறப்பு அலங்காரத்தில் மூலவா் அம்மன்.

Updated On :26 மார்ச் 2026, 1:55 am IST

குடியாத்தம், கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன. பின்னா் பால் கம்பத்துக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்துகோயில் வளாகத்தில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பால் கம்பம் நடப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் தேவகி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், கெளரவ தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.