இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட அரசுக்கு அறிக்கை

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

டாஸ்மாக் (கோப்புப்படம்)

Updated On :20 மே 2026, 12:04 am IST

வேலூா் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது -

பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவது தொடா்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டதால் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் கூட்டம் அதிகமாக உள்ளது.

அங்கு ஏஎஸ்பியுடன் ஆலோசிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடையை மூட அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காட்பாடியில் உள்ள ஆதரவற்றோா் விடுதியில் காணாமல் போன குழந்தைகளை தேடி வருகின்றனா். காப்பகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் ஒருங்கிணைப்பின்பேரில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் அனைத்து காப்பக கண்காணிப்பாளா்கள், வாா்டன்கள், நடத்துநா்களை அழைத்து பின்பற்றவேண்டிய வழிமு றைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றாா்.