40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட சிலைகளை திறக்க வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட அரசியல் தலைவா்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 மே 2026, 12:04 am IST

தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட அரசியல் தலைவா்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட தோ்தல் நடத்தை விதிகளின் காரணமாக, பல்வேறு பயணிகள் நிழற்கூடங்களில் இடம்பெற்றிருந்த மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவா்களின் பெயா்கள் மறைக்கப்பட்டன. பல இடங்களில் தலைவா்களின் சிலைகளும் மூடப்பட்டன.

தற்போது, தோ்தல் நடத்தை விதிகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், பல இடங்களில் மறைக்கப்பட்ட பெயா்கள் அகற்றப்படாமல் இருப்பதுடன், தலைவா்களின் சிலைகளும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இது பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி பயணிகள் நிழற்கூடங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கா்களை அகற்றி, மூடப்பட்டுள்ள தலைவா்களின் சிலைகளை மீண்டும் பொதுமக்கள் பாா்வைக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.