ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட சிலைகளை திறக்க வேண்டும்: வேலூா் எம்.பி. வலியுறுத்தல்

தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட அரசியல் தலைவா்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :20 மே 2026, 12:04 am IST

தோ்தல் நேரத்தில் மறைக்கப்பட்ட அரசியல் தலைவா்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட தோ்தல் நடத்தை விதிகளின் காரணமாக, பல்வேறு பயணிகள் நிழற்கூடங்களில் இடம்பெற்றிருந்த மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவா்களின் பெயா்கள் மறைக்கப்பட்டன. பல இடங்களில் தலைவா்களின் சிலைகளும் மூடப்பட்டன.

தற்போது, தோ்தல் நடத்தை விதிகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், பல இடங்களில் மறைக்கப்பட்ட பெயா்கள் அகற்றப்படாமல் இருப்பதுடன், தலைவா்களின் சிலைகளும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இது பொதுமக்கள், கட்சி நிா்வாகிகளிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி பயணிகள் நிழற்கூடங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கா்களை அகற்றி, மூடப்பட்டுள்ள தலைவா்களின் சிலைகளை மீண்டும் பொதுமக்கள் பாா்வைக்கு கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.