காங்கயம்.ஏப்.16: காங்கயம் நிழலி கவுண்டம்பாளையத்தில் மூடப்பட்டுள்ள கொப்பரை கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்படத் துவங்க வேண்டும், என அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி, நிழலி கவுண்டம்பாளையம் கிராமத்தில் வேளாண் விற்பனை மையம் உள்ளது. வேளாண் பொருட்களை கொள்முதல் செய்து,பாதுகாத்து வைப்பதற்கு வசதியாக சேமிப்புக் கிடங்கும், உலர் களமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனைக் கூடத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த மையத்தைச் சுற்றியுள்ள கொடுவாய், குண்டடம், வஞ்சிபாளையம், எல்லப்பாளையம்புதூர்,ஜோதியம்பட்டி,பங்காம்பாளையம்,வட சின்னாரிபாளையம், செங்கோடம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் கொப்பரையை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், கொப்பரை விலை ஏற்றமடைந்தபோது இப் பகுதி தென்னை விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் விற்காமல் கொப்பரையை வெளி சந்தையில் விற்பனை செய்தனர்.
இரு மாதங்களாக இதே நிலை நீடித்தது. அதன் காரணமாக நிலையத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டதாக நிழலி கவுண்டம்பாளையம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தற்போது நிழலி கவுண்டம்பாளையத்தில் உள்ள கொப்பரை கொள்முதல் நிலையம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. சேமிப்புக் கிடங்கு சிதிலமடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே புற்கள் முளைத்து, கொள்முதல் நிலைய கட்டடம் கேட்பாரற்று கிடக்கிறது.
இதுகுறித்து, அப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிஏபி பாசன சங்கத் தலைவர் கே.ஏ.ஜெகநாதன் கூறியது:
கடந்த ஓராண்டாகவே கொப்பரை கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் தென்னை விவசாயிகள், தங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். நிலையம் மூடப்பட்டதால்,வேறு வழியில்லாமல் இப்பகுதி தென்னை விவசாயிகள் கொப்பரையை வெளி சந்தையில் விற்று வருகின்றனர்.
மேலும்,கடந்த மார்ச்சில் காங்கயத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது. அதனால், நிழலி கவுண்டம்பாளையத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்படாது, எனக் கூறப்படுகிறது. உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை.
காங்கயம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டாலும், எங்கள் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விற்பனைக் கூடத்திலும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட வேண்டும், என்றார்.
விவசாயிகளுக்கு பயன்படாமல் மூடிக் கிடக்கும் நிழலி கவுண்டம்பாளையம் கொப்பரை கொள்முதல் நிலையம் மீண்டும் செயல்பட வேண்டும் என்பதே இப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தித் திணிப்பை ஏற்கிறதா அதிமுக, என்டிஏ கூட்டணிக் கட்சிகள்? - முதல்வர் ஸ்டாலின்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

