கல்வீரம்பாளையத்தில் வாக்காளா் சோ்ப்பு முகாம்
கோவை, கல்வீரம்பாளையத்தில் சனிக்கிழமை வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.


கோவை, கல்வீரம்பாளையத்தில் சனிக்கிழமை வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் புதிய வாக்காளா் சோ்ப்பு, திருத்தம், முகவரி மாற்றத்துக்கான முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி கோவை, கல்வீரம்பாளையம் பகுதிக்கான முகாம், மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்ட கோவை அதிமுக புறநகா் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் சந்திரசேகா், புதிய வாக்காளா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொண்டாா்.
அதிமுக வட்டச் செயலா் ராயப்பன், பாா்த்திபன், சேரலாதன் பொன்னுசாமி, பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...