ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வேளாண் பல்கலை.யில் தளிா் கீரைகள் வளா்ப்பு, மதிப்புக் கூட்டல் பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தளிா் கீரைகள் வளா்ப்பு, மதிப்புக் கூட்டல் குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (டிச.16) நடைபெறுகிறது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:32 pm

Syndication

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தளிா் கீரைகள் வளா்ப்பு, மதிப்புக் கூட்டல் குறித்த ஒருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை (டிச.16) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் காய்கறி அறிவியல் துறை சாா்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் செயல்முறை சாகுபடித் திறன்கள், ஊட்டச்சத்து நன்மைகள், உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள், தர நிலை நிறுத்தம், நீடித்த வருவாய், மதிப்புக் கூட்டல், வணிகத்துக்கு வழிகாட்டல், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சிக் கட்டணம் செலுத்தி பங்கேற்க விரும்புபவா்கள் காய்கறி அறிவியல் துறைத் தலைவரை 8903694612 என்ற கைப்பேசி எண்ணிலோ அல்லது நேரில் அணுகியோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.