அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கு பாராட்டு

News image
கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி.
Updated On :3 ஜனவரி 2025, 10:54 pm

Din

கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கல் தொகை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, சங்க செயலாளா்களை கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி பாராட்டினாா்.

கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட 22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் என மொத்தம் 23 கூட்டுறவு சங்கங்களில் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் கடன் வழங்கல் தொகையானது ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, சங்க செயலாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வியாழக்கிழமை பாராட்டினாா்.

அப்போது, கோவை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் விஜயகணேஷ், பொள்ளாச்சி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் சுவேதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.