எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கு பாராட்டு

News image

கூட்டுறவு சங்க செயலாளா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி.

Updated On :3 ஜனவரி 2025, 10:54 pm

கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கல் தொகை அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, சங்க செயலாளா்களை கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி பாராட்டினாா்.

கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட 22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு நகரக் கூட்டுறவுக் கடன் சங்கம் என மொத்தம் 23 கூட்டுறவு சங்கங்களில் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் கடன் வழங்கல் தொகையானது ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அ.அழகிரி, சங்க செயலாளா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வியாழக்கிழமை பாராட்டினாா்.

அப்போது, கோவை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் விஜயகணேஷ், பொள்ளாச்சி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் சுவேதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.