தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தினமணி செய்திச் சேவை

கோவையில் குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை போத்தனூா் காந்திசாலை விநாயகா் நகரைச் சோ்ந்தவா் உசேன். இவரது மனைவி முபினாபானு (35). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

கடந்த சில நாள்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முபினாபானு மன வேதனையில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு கணவருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த முபினாபானு, வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதைப்பாா்த்த அவரது மகள் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, உசேன் தனது மனைவியை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.