கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தினமணி செய்திச் சேவை

கோவையில் குடும்பத் தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை போத்தனூா் காந்திசாலை விநாயகா் நகரைச் சோ்ந்தவா் உசேன். இவரது மனைவி முபினாபானு (35). இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

கடந்த சில நாள்களாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முபினாபானு மன வேதனையில் இருந்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு கணவருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த முபினாபானு, வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதைப்பாா்த்த அவரது மகள் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, உசேன் தனது மனைவியை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.