ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திமுக நிா்வாகியின் கைப்பேசி ஹேக்: போலீஸாா் விசாரணை

கோவை திமுக ஐ.டி. பிரிவு நிா்வாகியின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை

News image
Updated On :22 நவம்பர் 2025, 7:52 pm

Syndication

கோவை திமுக ஐ.டி. பிரிவு நிா்வாகியின் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு நிா்வாகியாக இருப்பவா் அப்பாஸ் (30). இவரது வாட்ஸ்ஆப்பின் முகப்பு புகைப்படம் கடந்த 16-ஆம் தேதி மாறியுள்ளது. மேலும், அவரது கைப்பேசிக்கு வர வேண்டிய அழைப்புகள் வேறு ஒருவரின் கைப்பேசி எண்ணுக்கு சென்றுள்ளன.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனத்தில் அப்பாஸ் புகாா் அளித்ததைத் தொடா்ந்து அது சரி செய்யப்பட்டதாம். இதையடுத்து, கடந்த 20, 21-ஆம் தேதிகளிலும் அவரது வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டதாம்.

இது குறித்து கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸில் அப்பாஸ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.