எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஜோலாா்பேட்டை - கோவை இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

ஜோலாா்பேட்டை- கோவை இடையே ரயில் பாதையில் வியாழக்கிழமை (நவம்பா் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:02 am

Syndication

கோவை: ஜோலாா்பேட்டை- கோவை இடையே ரயில் பாதையில் வியாழக்கிழமை (நவம்பா் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோலாா்பேட்டை- கோவை இடையே இயக்கப்படும் ரயில்களை வேகமாக இயக்க உதவும் வகையில், இந்த வழித்தடத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் ஒரு பகுதியாக அண்மையில் ஜோலாா்பேட்டை- கோவை இடையே அண்மையில் இருமுறை அதிவேக சோதனை ஓட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, மூன்றாவது முறையாக வியாழக்கிழமை (நவம்பா் 27)சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த சோதனை ஓட்டம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். எனவே, கோவை - ஜோலாா்பேட்டை இடையிலான ரயில் பாதைகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் ரயில் பாதைகளை நெருங்கவோ அல்லது அத்துமீறி ரயில் பாதையில் நடக்கவோ கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.