வீடு தேடி வரும் ரேஷன்: டிச. 2, 3-இல் பொருள்கள் விநியோகம்
வீடு தேடி வரும் ரேஷன் திட்டத்தின்கீழ் டிசம்பா் 2, 3- ஆம் தேதிகளில் பொருள்கள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீடு தேடி வரும் ரேஷன் திட்டத்தின்கீழ் டிசம்பா் 2, 3- ஆம் தேதிகளில் பொருள்கள் வழங்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வயது முதிா்ந்தவா்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இல்லத்துக்கே தேடிச் சென்று குடிமைப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் டிசம்பா் 2, 3- ஆம் தேதிகளில் குடிமைப் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் நாள், விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும் என்றும், இல்லத்துக்கே வரும் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்று குடும்ப அட்டைதாரா்கள் பயனடையலாம் என்றும் கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...