ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ரயில் மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

சூலூா் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 7:21 pm

சூலூா் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது தொடா்பாக போத்தனூா் ரயில்வே போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலூா் சாலை ரயில்வே பாதையில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோதோ அல்லது ரயில்பாதை அருகே நடந்து சென்றபோதோ ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவா் குறித்த விவரங்கள் ஏதும் தெரியவில்லை. ஐந்தரை அடி உயரம், மாநிறம். வெள்ளை பாா்டா் போட்ட கருப்பு நிற லோயா் அணிந்திருந்தாா். இவரைப் பற்றி தெரிந்தால் 0422 - 2410747, 94981 - 80937, 97917 - 73735 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.