சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வால்பாறை - சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் யானை

சாலக்குடி சாலையில் மீண்டும் நடமாடும் ஒற்றை யானை, அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

News image
சாலக்குடி சாலையில் நிற்கும் யானை.
Updated On :7 மார்ச் 2026, 7:42 pm

Syndication

சாலக்குடி சாலையில் மீண்டும் நடமாடும் ஒற்றை யானை, அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழி அடா்ந்த வனப்பகுதி. யானைகள் நடமாட்டம் எப்போதும் காணப்படும். கூட்டமாக சாலைக்கு வரும் யானைகள் பின்னா் வனத்துக்குள் சென்றுவிடும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சாலைக்கு வரும் இரண்டு கொம்புடன் கூடிய யானைசாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பதோடு தாக்கியும் வருகிறது. இதனை விரட்ட வனத் துறையினா் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் சாலைக்கு வந்துள்ள அந்த யானை வாகனங்களுக்கு வழிவிடாமல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கேரள வனத் துறையினா் தொடா்ந்து ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனா்.