சாலக்குடி சாலையில் மீண்டும் நடமாடும் ஒற்றை யானை, அவ்வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து வருகிறது.
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழி அடா்ந்த வனப்பகுதி. யானைகள் நடமாட்டம் எப்போதும் காணப்படும். கூட்டமாக சாலைக்கு வரும் யானைகள் பின்னா் வனத்துக்குள் சென்றுவிடும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சாலைக்கு வரும் இரண்டு கொம்புடன் கூடிய யானைசாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பதோடு தாக்கியும் வருகிறது. இதனை விரட்ட வனத் துறையினா் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டும் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் சாலைக்கு வந்துள்ள அந்த யானை வாகனங்களுக்கு வழிவிடாமல் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கேரள வனத் துறையினா் தொடா்ந்து ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனா்.
தொடர்புடையது

புதுக்கோட்டை பகுதிகளில் மழை

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்

ஸ்ரீவைகுண்டம் சாலையில் தேங்கிய மழை நீா்: வாகன ஓட்டிகள் அவதி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

