பிளஸ் 2 தேர்வில் கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் எடுத்து, காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவி ஆர்.சுவேதா சாதனை படைத்துள்ளார்.
கோவை, பொள்ளாச்சி வருவாய் மாவட்டங்களில் உள்ள 71 அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளி என்ற பெருமையையும் இப்பள்ளி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் 69 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1200-க்கு 1163 மதிப்பெண் எடுத்த முதல் மாணவியான சுவேதா பெற்ற மதிப்பெண் விவரம்: தமிழ்-193, ஆங்கிலம்-184, இயற்பியல்-191, வேதியியல்-198, கணிதம்-198, கணினி அறிவியல்-199.
இதே பள்ளியை சேர்ந்த ஜி.சுரேந்திரன் 1133 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாமிடத்தையும், எஸ்.கார்த்திக் 1124 மதிப்பெண் எடுத்து மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.
பொறியியலில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் கற்பதே தனது இலட்சியம் என்று கூறுகிறார் சுவேதா.
மாணவி சுவேதாவை பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி, ஆசிரியர்கள் அருள்சிவா, சாக்ரடீஸ் குலசேகரன், மகேஸ்வரி, வசந்தாமணி உள்பட பலர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம்

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


