பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆம்னி பேருந்து ஓட்டுநர் கொலை

பொள்ளாச்சியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:02 am

DIN

பொள்ளாச்சியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்.
 பொள்ளாச்சி, மகாலிங்கபுரம், சரோஜினி வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், கீழ இரால், இந்திரா நகரைச்சேர்ந்தவர் குரு (45). கடிகார வியாபாரி. இருவரும் பொள்ளாச்சி, காந்தி மண்டபம் வீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிவந்துள்ளனர். இதில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குள்ளும் பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில், விடுதியில் இருந்தபோது மது போதையில் இருவருக்கும் புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆறுமுகத்தை குரு கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த ஆறுமுகம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து குருவைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.