மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ராக்கிபாளையத்தைச் சேர்ந்த விவசாயி உயிரிழந்தார்.
அன்னூர் அருகே உள்ள ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் ஓதிசாமி. இவரது மகன் கணேசமூர்த்தி (37), விவசாயி. இவருக்குத் திருமணமாகவில்லை. இந்நிலையில், காரமடை அருகே தாத்தம்பாளையம் கிராமத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு கணேசமூர்த்தி செவ்வாய்கிழமை இரவு சென்றுள்ளார். பின்னர் புதன்கிழமை காலை 7 மணி அளவில் அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது, பொகலூர் அருகே இந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்து கொண்டிருந்த லாரி மோதியது.
இதில், கணேசமூர்த்தி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







