கோவையில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு குறுந்தொழில் முனைவோர் சங்கம், ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக காட்மா சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொது நல அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு குறுந்தொழில் முனைவோர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் ஓடாது... இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ சங்கக் கூட்டுக் கமிட்டி தலைவர் பி.கே.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதால் கோவையில் வியாழக்கிழமை ஆட்டோக்கள் இயக்கப்படமாட்டாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்வெட்டு பிரச்னைக்கு பிறா் மீது பழி சுமத்தக் கூடாது: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி
கல்லூரி ஆசிரியா்களின் பணி மேம்பாட்டு கோரிக்கையை செயல்படுத்த உயா் கல்வி அமைச்சர் விஸ்வநாதன் உறுதி!
புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

தமிழகத்திலிருந்து ஓராண்டில் 23 புதிய ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


