சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் போதாது: வால்பாறை மக்கள் ஏமாற்றம்

வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, இப்பகுதி மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. 
Updated on
1 min read

வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, இப்பகுதி மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. 
வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், இப்பகுதியில் பெரிய அளவில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றால், நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் வனத் துறையினர், எந்த ஒரு அடிப்படை வசதியையும் ஏற்படுத்தவில்லை. 
வால்பாறையில் படகு இல்லமும் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இவை விரைவில் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு கோடை விழாவின்போது அறிவிக்கப்பட்டது. 
ஆனால் இதுவரை அதற்கான எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்களும்,  சுற்றுலாப் பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com