கோவை அருகே நீலாம்பூரில் லாரி மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த வாசகம் மகன் மகேஸ்வரன் (35). இவர், சூலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், மகேஸ்வரன் தனது இருசக்கர வாகனத்தில் முதலிபாளையம் பிரிவு அருகே உள்ள அவிநாசி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பக்கவாட்டில் இருந்து வந்த டேங்கர் லாரி மகேஸ்வரன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற சூலூர் போலீஸார், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









