சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

லாரி மோதி தொழிலாளி சாவு

கோவை அருகே நீலாம்பூரில் லாரி மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:31 am IST

கோவை அருகே நீலாம்பூரில் லாரி மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த வாசகம் மகன் மகேஸ்வரன் (35). இவர்,  சூலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில், மகேஸ்வரன் தனது இருசக்கர வாகனத்தில் முதலிபாளையம் பிரிவு அருகே உள்ள அவிநாசி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். 
அப்போது பக்கவாட்டில் இருந்து வந்த டேங்கர் லாரி மகேஸ்வரன் மீது மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற சூலூர் போலீஸார், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.