மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென் மாவட்டங்களிலும் கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள்: விசாரணையில் தகவல்

போலி ஏடிஎம் அட்டை தயாரித்து கோவை ஏடிஎம் மையத்தில் லட்சக்கணக்கான ரூபாயைத் திருடிய வழக்கில் கைதான 6 பேரையும் காவலில்

Updated On :9 ஜூலை 2018, 1:46 am

போலி ஏடிஎம் அட்டை தயாரித்து கோவை ஏடிஎம் மையத்தில் லட்சக்கணக்கான ரூபாயைத் திருடிய வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில்,  அவர்கள் தென் மாவட்டங்களிலும் ஸ்கிம்மர் பொருத்தி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 
 கோவை, சிங்காநல்லூர், காமராஜர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ஜூன் 2-ஆம் தேதி பணம் எடுத்த 20 நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ. 12 லட்சம் திருடப்பட்டது. 
இதுகுறித்து தனியார் வங்கி மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். 
இதில், ஏடிஎம் மையத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி போலி ஏடிஎம் அட்டைகள் தயாரித்து 6 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.  
 இதுதொடர்பாக  கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளியைச் சேர்ந்த பி.தமிழரசன் (26), ஜி.வாசிம் (30), சென்னையைச் சேர்ந்த எஸ்.நிரஞ்சன் (38), இலங்கை அகதியும், சென்னையில் வசித்து வருபவருமான டி. லவசாந்தன் (29), திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த எஸ்.கிஷோக் (25), திருப்பூர், அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.மனோகரன்(19) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து போலி ஏடிஎம் அட்டைகள், செல்லிடப்பேசி, மடிக்கணினி, 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். 
 இந்த நிலையில், கைதான 6 பேரையும் கடந்த ஜூலை 2 முதல் 7-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். 
இந்த விசாரணையில், ஏடிஎம் கும்பல் தென் மாவட்டங்களான மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் நாமக்கல்ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. மேலும், லவசாந்தன் மனைவி பெயரில் வங்கியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் முடக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.