போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

நீராதாரங்களைக் காக்க அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

நீராதாரங்களைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்று  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்  பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

Updated On :9 ஜூலை 2018, 1:47 am

நீராதாரங்களைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்று  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்  பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
இக்கட்சியின்  மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சாயக்கழிவு, தோல் கழிவு, நகராட்சி, மாநகராட்சிகளின் கழிவுகள் கலப்பதால் கொங்கு மண்டலத்தில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இதைத் தடுக்க, நீர்நிலைகளை  அரசு  சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்க வேண்டும். 
வன்கொடுமை சட்டத்தில் விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பது சரியல்ல.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,  கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை சார்பில், பொள்ளாச்சியில் "பண்பாடு போற்றுவோம்' என்ற கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம். 
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் வரவேற்க தக்கது. ஆயினும் இது தொடர்பாக நிலத்தை இழக்கும் மக்களுக்கு இரட்டிப்பு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.