எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நீராதாரங்களைக் காக்க அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

நீராதாரங்களைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்று  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்  பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 1:47 am

DIN

நீராதாரங்களைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்று  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின்  பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
இக்கட்சியின்  மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:
சாயக்கழிவு, தோல் கழிவு, நகராட்சி, மாநகராட்சிகளின் கழிவுகள் கலப்பதால் கொங்கு மண்டலத்தில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இதைத் தடுக்க, நீர்நிலைகளை  அரசு  சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்க வேண்டும். 
வன்கொடுமை சட்டத்தில் விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பது சரியல்ல.
வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,  கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை சார்பில், பொள்ளாச்சியில் "பண்பாடு போற்றுவோம்' என்ற கலாசார விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம். 
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் வரவேற்க தக்கது. ஆயினும் இது தொடர்பாக நிலத்தை இழக்கும் மக்களுக்கு இரட்டிப்பு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.