லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் வால்பாறையில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
வால்பாறைக்கு காய்கறி, மளிகை, பால் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் பொள்ளாச்சியில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதில் காய்கறிகள் அனைத்து நாள்களிலும் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, பொருள்களை கடந்த இரு தினங்களாக மினி லாரிகள் மூலம் கொண்டு வருகின்றனர். இதனால் சில காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தம் தொடர்ந்து நீடித்தால், பொருள்களின் வரத்து குறைந்து விலைகள் உயர வாய்ப்புள்ளது.
லாரி வேலை நிறுத்தத்தினால் தேயிலைத் தூள் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படவில்லை. கனமழை காரணமாக தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகளில் தூள் உற்பத்தியும்
குறைந்து காணப்படுகிறது. சில எஸ்டேட் நிர்வாகத்தினர் தேயிலைத் தூளை தங்கள் சொந்த லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









