வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மூதாட்டியிடம் 12 பவுன் நகைப் பறிப்பு

மூதாட்டியிடம் 12 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On :12 நவம்பர் 2018, 10:16 pm


மூதாட்டியிடம் 12 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (70). இவரது மனைவி சாந்தகுமாரி (62). இவர்கள் இருவரும் திருச்சி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் வந்துள்ளனர். திருமண மண்டபத்துக்கு எதிரே காரை நிறுத்தி விட்டு சாலையை கடந்துள்ளனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாந்தகுமாரி அணிந்திருந்த 12 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். மர்ம நபர்கள் நகையைப் பறித்தபோது நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில் சாந்தகுமாரிக்குத் தலை, கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மூர்த்தி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் குற்றப் பிரிவுக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பொள்ளாச்சி, நவ. 12: பொள்ளாச்சி அருகே மருந்துக் கடை உரிமையாளரின் வீட்டுப் பூட்டை உடைத்து 13 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஏரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (43). மருந்துக்கடை உரிமையாளர். இவர், வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளியூர் சென்றுவிட்டார். பின்னர், மீண்டும் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.