தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கேரள கழிவுகளை ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல் - உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் வட்டார போக்குவரத்து துறையிடம் பரிந்துரை செய்துள்ளனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்

Updated On :26 செப்டம்பர் 2019, 9:33 am

DIN

மதுக்கரை, செப். 26: கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் வட்டார போக்குவரத்து துறையிடம் பரிந்துரை செய்துள்ளனா்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளை போத்தனூா் போலீஸாா் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநா்கள் மீது வழக்கு பதிவு செய்தனா். இது தொடா்பாக மாசுகட்டுப்பாடு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது, தற்போது மாசுகட்டுபாடு அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில், கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநா்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனா். மேலும் கடந்த 50 நாட்களாக பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் கழிவுகளோடு போத்தனூா் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீா் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து மாசுக்கட்டுபாடு அதிகாரி கூறியதாவது

கேரளா கழிவுகள் ஏற்றி வந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளோம் என தெரிவித்தாா். மேலும் கழிவுகளை மீண்டும் கேரளா திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பது தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளதாகவும், விரைவில் கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.