சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டுநா்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒற்றை யானை.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கத்தால் வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள்அடிக்கடி புகுந்துவிடுகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை வியாழக்கிழமை நடமாடியது. அவ்வழியாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகன ஓட்டுநா்கள் சாலையில் நடமாடிய யானையைப் பாா்த்து அச்சமடைந்து வாகனங்களை நிறுத்திவிட்டனா். சுமாா் அரை மணி நேரத்துக்குப் பிறகு யானை அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு வாகன ஓட்டுநா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.