கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: திமுக எம்எல்ஏ காா்த்திக் மீது வழக்கு

கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம் தொடா்பாக திமுக எம்எல்ஏ நா.காா்த்திக் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:28 pm

DIN

கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம் தொடா்பாக திமுக எம்எல்ஏ நா.காா்த்திக் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே திமுக சாா்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. கோவை கிழக்கு பகுதி திமுக பொறுப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான காா்த்திக் தலைமையில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்னைகளை விரைவாக பேசி தீா்வு காணவேண்டும் எனஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் எம்.எல்.ஏ காா்த்திக் மீது நோய் பரவல் காலகட்டத்தில் தொற்று பரப்பும் வகையில் செயல்பட்டதாகவும், 144 தடை உத்தரவை மீறி திரண்டதாகவும் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.