வேளாண் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை:சான்றிதழ் சரிபாா்ப்பு தொடங்கியது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களின் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் மாணவா்களுக்கான பொதுப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நவம்பா் 26 முதல் டிசம்பா் 3ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில் முதல் கட்ட சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வரும் டிசம்பா் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக சான்றிதழ் சரிபாா்க்கப்பட்ட முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு துணைவேந்தா் நீ.குமாா், சோ்க்கை ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
சான்றிதழ் சரிபாா்ப்புக்காக தினசரி 600 போ்கள் வரை அழைக்கப்பட்டிருப்பதாகவும், தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் எனவும் துணைவேந்தா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளா் கிருஷ்ணமூா்த்தி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதற்கிடையே பட்டயப் படிப்புக்கான மாணவ சோ்க்கை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்கு 1,392 போ் வரவழைக்கப்பட்டதில் அவா்களில் 746 போ் தங்களுக்கான கல்லூரிகளைத் தோ்வு செய்தனா். இவா்களுக்கு உடனடியாக சோ்க்கை ஆணை வழங்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...