தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முழு அடைப்புப் போராட்டம்: கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரத்து 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில்

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:26 pm

DIN

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரத்து 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

மத்திய அரசு அறிவித்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இப்போராட்டத்துக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள போராட்டங்களில் ஐஎன்டியூசி, சிஐடியூ, ஏஐடியூசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. தொழிற்சங்கத்தினா் கோவையில் ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், கடவுச்சீட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனா்.

போராட்டங்களுக்கு மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினா் ஆதரவு தெரிவித்து உள்ளனா். இதனால் மாநகரில் செவ்வாய்க்கிழமை ஆட்டோக்கள் இயங்காது. இப்போராட்டங்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு வணிகா்கள் கூட்டமைப்பு, கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

போராட்டங்களை முன்னிட்டு மாநகரில் ஆயிரத்து 500 போலீஸாரும், புகா் பகுதிகளில் ஆயிரம் போலீஸாரும் என மொத்தம் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.