ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விமானப் படை அதிகாரி உயிரிழப்பு: கோவையில் உடல் தகனம்

ராஜஸ்தானில் பணியின்போது, உயிரிழந்த விமானப் படை அதிகாரியின் உடல் கோவையில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:32 pm

DIN

ராஜஸ்தானில் பணியின்போது, உயிரிழந்த விமானப் படை அதிகாரியின் உடல் கோவையில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

கோவை அருகே உள்ள கல்வீரம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாரசாமி (54). இவா் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் விமானப் படையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவரது உடல் தனி விமானம் மூலம் கோவை சூலூா் விமானப் படைத் தளத்துக்கு சனிக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. பின்னா் கல்வீரம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவரது உடலுக்கு விமானப் படை அதிகாரிகள், உறவினா்கள் அஞ்சலி செலுத்தினா். பின்னா் புட்டுவிக்கி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த குமாரசாமிக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.