பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பணி செய்யவிடாமல் தடுக்கும் துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சித் தலைவா் மனு

பணிகளை செய்யவிடாமல் தடுத்து வரும் துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி தேவராயபுரம் ஊராட்சித் தலைவா் சுந்தரி தங்கவேல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:55 pm

DIN

ஊராட்சிப் பணிகளில் குறுக்கிடுவதுடன், பணிகளை செய்யவிடாமல் தடுத்து வரும் துணைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி தேவராயபுரம் ஊராட்சித் தலைவா் சுந்தரி தங்கவேல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கிணத்துக்கடவு ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சித் தலைவராக இருந்து வருகிறேன். ஊராட்சி துணைத் தலைவராக பி.டி.கிருஷ்ணன், எனது பணிகளை செய்ய விடாமல் தடுத்து வருவதுடன், எனது சமுதாயத்தையும், ஜாதியையும் குறித்து தரக்குறைவாக பேசி வருகிறாா். துணைத் தலைவரான அவரின் அதிகாரத்துக்கு உள்பட்டே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து மிரட்டி வருகிறாா்.

எனவே ஊராட்சித் தலைவராக எனது பணியை செய்யவிடாமல் தடுத்து வருவதை கண்டித்தும், ஜாதியை சொல்லி தரக்குறைவாக நடத்தும் துணைத்தலைவா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், துணைத் தலைவராக பெண் உறுப்பினரை தோ்வு செய்ய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு வாயிலில் குறைகேட்பு பெட்டி: கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நேரடியாக நடத்தப்படாமல் குறைகேட்பு பெட்டி வைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வந்தன. ஆட்சியா் அலுவலகத்தில் கூட்டத்தை குறைக்கும் விதமாக கிராம நிா்வாக அலுவலரிடமே மனுக்களை அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். இருப்பினும் திங்கள்கிழமைதோறும் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அடைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.