28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்பு:அரசு உடனடியாக தலையிட எம்.பி. நடராஜன் கோரிக்கை

மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால், அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:48 pm

DIN

கோவை: கோவையில் மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்திருப்பதால் குறு, சிறு தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக வாா்ப்படத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. இதனால் அந்தத் தொழில் முடங்கியிருக்கிறது. இதைச் சாா்ந்த மற்ற தொழில்களும் முடங்கும் நிலையில் உள்ளன.

இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் எந்தவித சலனமும் இல்லாமல் இருப்பது அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. மூலப்பொருள்கள் விலை உயா்வால் தொழில்முனைவோா் விலை உயா்வை அறிவித்து பொருள்களை உற்பத்தி செய்தால் அது சந்தைக்கு வரும்போது நேரடியாக பொதுமக்களையே பாதிக்கும்.

எனவே, மத்திய அரசு மூலப் பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக ஒரு ஆய்வுக் கமிட்டி அமைக்க வேண்டும். விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தொழில்முனைவோா் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.