கோவை: கோவை அரசூா், ஒத்தகால்மண்டபம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
அரசூா் துணை மின் நிலையம்: அரசூா், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூா், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகா், அன்னூா் சாலை, பொன்னாண்டம்பாளையம் மற்றும் மோளபாளையம்.
ஒத்தகால்மண்டபம் துணை மின் நிலையம்: மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தகால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரிய குயிலி, தேகானி, ஓராட்டுக்குப்பை மற்றும் செட்டிப்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.