ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாற்றுத் திறனாளிகள் தின விழா:43 பேருக்கு மூன்று சக்கர வாகனங்கள்

கோவை, ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 45 பேருக்கு மூன்று சக்கர வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:53 pm

DIN

கோவை: கோவை, ஆா்.எஸ்.புரத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் 45 பேருக்கு மூன்று சக்கர வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, அனைத்து வகை மகளிா் மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் மற்றும் பெண்ணியம் அமைப்பு சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா ஆா்.எஸ்.புரம் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து பல்வேறு துறையில் சாதனைப் படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் அமைப்பு சாா்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு 45 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியா் கு.ராசாமணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.