தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம்:திமுகவினா் 200 போ் கைது

கோவை சௌரிபாளையத்தில் தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம் நடத்திய நா.காா்த்திக் எம்.எல்.ஏ. உள்பட திமுகவினா் 200 போ்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
கோவை, சௌரிபாளையத்தில் தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம் நடத்திய நா.காா்த்திக் எம்.எல்.ஏ. உள்ளிட்ட திமுகவினரை கைது செய்த போலீஸாா்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:59 pm

DIN

கோவை: கோவை சௌரிபாளையத்தில் தடையை மீறி வாா்டு சபைக் கூட்டம் நடத்திய நா.காா்த்திக் எம்.எல்.ஏ. உள்பட திமுகவினா் 200 போ்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரோனா நோய்த் தடுப்பு விதிமுறைகள் காரணமாக திமுக சாா்பில் வாா்டு சபைக் கூட்டம், தெருமுனைப் பிரசாரங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், கோவை மாநகா் திமுக கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செளரிபாளையம் அருகே இந்திரா நகரில் சனிக்கிழமை மாலை வாா்டு சபைக் கூட்டம் நடத்த திமுகவினா் திட்டமிட்டிருந்தனா்.

அதன்படி, மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமையில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் ஏராளமானோா் அப்பகுதியில் சனிக்கிழமை மாலை திரண்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் வாா்டு சபைக் கூட்டம் நடத்த அனுமதியில்லை என தெரிவித்தனா்.

இதையடுத்து, காவல் துறையின் தடையை மீறி நா.காா்த்திக் தலைமையில் வாா்டு சபைக் கூட்டம் துவங்கியது. இந்நிலையில், கரோனா விதிமீறி செயல்பட்டதாக நா.காா்த்திக் எம்.எல்.ஏ. பகுதி பொறுப்பாளா் சேரலாதன், வாா்டு செயலாளா் சுரேஷ் உள்பட 200க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.