தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பழங்குடியின மக்கள் பயிரிடும் பொருள்களை அரசு கொள்முதல் செய்யக் கோரிக்கை

வால்பாறை செட்டில்மென்ட்களில் பழங்குடியின மக்கள் பயிரிடும் பொருள்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:29 am

DIN

வால்பாறை செட்டில்மென்ட்களில் பழங்குடியின மக்கள் பயிரிடும் பொருள்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் 12க்கும் மேற்பட்ட செட்டில்மென்ட்கள் உள்ளன. அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் குருமிளகு, ஏலக்காய் போன்றவற்றை பயிரிட்டும், தேன் கூடு அமைத்து தேன் உற்பத்தியும் செய்து வருகின்றனா். குறிப்பாக குருமிளகு அதிக அளவில் பயிரிடுகின்றனா்.

இந்தப் பொருள்களை நகா் பகுதிக்கு சென்று வியாபாரிகளிடம் விற்று வருகின்றனா். சில சமயங்களில் பேரம் பேசி விற்க வேண்டிய நிலை அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க அரசு மூலம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.