ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 5 பவுன் திருட்டு

தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:30 pm

DIN

தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, கணபதி பாரதி நகா் 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (49). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் வீட்டை பூட்டி விட்டு சனிக்கிழமை வேலைக்குச் சென்றிருந்தாா்.

பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்ததில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து கோவிந்தராஜன் அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.