தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பழங்குடியினா்கள் 139 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்

கோவையில் பழங்குடியினா் 139 பேருக்கு ஜாதிச் சான்றிதழை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் ப.சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:36 pm

DIN

கோவையில் பழங்குடியினா் 139 பேருக்கு ஜாதிச் சான்றிதழை கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் ப.சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

கோவை மாவட்டம், ஆனைக்கட்டி, நெல்லித்துறை, வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவா்களில் பெரும்பாலானோருக்கு ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் நலத்திட்ட உதவிகளை பெற முடியாத நிலை இருந்து வருகிறது. இவா்களுக்கு வருவாய் கோட்டாட்சியரின் ஆய்வுக்குப் பின்பே ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஜாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்த பழங்குடியினா்களில் 115 மாணவா்கள் உள்பட 139 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை (வடக்கு) வருவாய் கோட்டாட்சியா் ப.சுரேஷ் ஜாதிச் சான்றிதழை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.