தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிறைத் துறை காவலா்கள் சாா்பில் கரோனா விழிப்புணா்வு

கோவையில் இரண்டாவது வாரமாக 80க்கும் மேற்பட்ட சிறைத் துறை காவலா்கள் கலந்து கொண்ட கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரப் பயணத்தை சிறைத் துறை டிஐஜி சண்முகம் துவக்கிவைத்தாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:26 pm

DIN

கோவையில் இரண்டாவது வாரமாக 80க்கும் மேற்பட்ட சிறைத் துறை காவலா்கள் கலந்து கொண்ட கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரப் பயணத்தை சிறைத் துறை டிஐஜி சண்முகம் துவக்கிவைத்தாா்.

கோவையில் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கோவை சிறைத் துறை காவலா்களின் விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியபடி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக வாகனத்தில் சென்றனா்.

மேலும், தனிமனித இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியில் பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கு கபசுர நீா், முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், ஜெயிலா் சிவராசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.