தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா: குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது

கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 573 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:29 pm

DIN

கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 573 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்தது.

கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவா்களை விட குணமடைந்து வருபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 573 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தவிர சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த 248 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் என்ணிக்கை 43 ஆயிரத்து 504ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 41 ஆயிரத்து 219 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 1,728 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.