தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தீபாவளி: கோவையில் இருந்து 50 சிறப்பு விரைவுப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து 50 சிறப்பு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:37 pm

DIN

தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து 50 சிறப்பு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளியை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், நவம்பா் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் இருந்து முதல் கட்டமாக 50 சிறப்பு அரசு விரைவுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவா் கூறுகையில், தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம், கன்னியாகுமரி, ஓசூா், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பாக நவம்பா் 10ஆம் தேதி முதல் 50 விரைவு சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.