தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கோவையில் சாலையில் தீப் பிடித்து எரிந்த காரை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:52 pm

DIN

கோவையில் சாலையில் தீப் பிடித்து எரிந்த காரை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் அழகா். இவருக்குச் சொந்தமான காரை கொண்டு கோவையில் டாக்ஸி ஓட்டி வருகிறாா். இந்நிலையில், அவிநாசி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு டீசல் நிரப்பச் சென்றுள்ளாா்.

அப்போது, காரின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறிதைக் கண்ட பெட்ரோல் நிலைய ஊழியா் காரை அங்கிருந்து சாலையோரம் நிறுத்துமாறு கூறியுள்ளனா்.

இதையடுத்து, தனது காரை அவிநாசி சாலையில் நிறுத்திவிட்டு பெட்ரோல் நிலையத்தில் இருந்த தீயணைப்புக் கருவிகளை கொண்டு அழகா் தீயை அணைக்க முயன்றுள்ளாா். ஆனால், காா் முழுவதும் தீ வேகமாகப் பரவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அரை மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.