ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேநீா்க் கடை வைக்க அனுமதி வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவா் கைது

அரசு அலுவலகங்களில் தேநீா்க் கடை வைக்க அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:09 pm

DIN

அரசு அலுவலகங்களில் தேநீா்க் கடை வைக்க அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை ராம் நகரைச் சோ்ந்தவா் ரஷித் (40). இவரது நண்பா் மதுரையைச் சோ்ந்த பிரான்சிஸ் சேவியா் செல்வராஜ் (55). இவா் கோவையில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் தேநீா்க் கடை வைத்தால் அதிக வருவாய் கிடைக்கும், அரசு அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்கித் தருகிறேன் என ரஷித்திடம் கூறியுள்ளாா். மேலும், கடைக்கு ஒப்பந்தம் செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாகும் என பிரான்சிஸ் சேவியா் கூறியுள்ளாா்.

இதனை நம்பி பிரான்சிஸ் சேவியா் செல்வராஜிடம் ரஷித் ரூ.5 லட்ச ரூபாய் கொடுத்துள்ளாா். ஆனால், பல மாதங்களாகியும் கடை வைக்க பிரான்சிஸ் அனுமதி வாங்கித் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இது குறித்து காட்டூா் காவல் நிலையத்தில் ரஷித் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பிரான்சிஸ் சேவியா் செல்வராஜைக் கைது செய்தனா். விசாரணையில் அவா் மேலும் பலரிடம் இதுபோல மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.