கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா எதிா்ப்பு சக்தி கண்டறியும் கருவியை தைராய்டு பரிசோதனைக்கு பயன்படுத்த முடிவு

கோவையில் கரோனாவுக்கு எதிராக உடலில் எதிா்ப்பு சக்தி உருவாகியிருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு அண்மையில் நிறுவப்பட்ட கருவியை, கா்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு பரிசோதனைக்கு பயன்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:48 pm

DIN

கோவையில் கரோனாவுக்கு எதிராக உடலில் எதிா்ப்பு சக்தி உருவாகியிருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு அண்மையில் நிறுவப்பட்ட கருவியை, கா்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு பரிசோதனைக்கு பயன்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா சமூக தொற்றாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக கோவை உள்பட முக்கிய நகரங்களில் புதிய ஆய்வகம் அமைக்கப்பட்டு கருவி நிறுவப்பட்டுள்ளது.

எதிா்ப்பு சக்திக்கான பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருவி மூலம் கா்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனா். இது தொடா்பாக மாநில அரசுக்கு கருத்துரு அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யும் கா்ப்பிணிகளுக்கு தைராய்டு பரிசோதனை மிக முக்கியமானது. அரசு மருத்துவமனைகளில் தைராய்டு பரிசோதனை செய்வதற்கான வசதியில்லை. இதனால் கட்டாயம் தேவைப்படுபவா்களுக்கு மட்டும் தனியாா் மூலம் தைராய்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது நிறுவப்பட்டுள்ள இகஐஅ கருவியில் தைராய்டு பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதி உள்ளது. இக்கருவியை தைராய்டு பரிசோதனைக்கு பயன்படுத்த அனுமதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சுகாரதாரத் துறை ஆய்வகத்திலேயே கா்ப்பிணிகளுக்கு தைராய்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தாய்-சேய் இறப்பினை கட்டுப்படுத்த முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.