கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி பறித்த இரு சிறுவா்கள் கைது

கூலி தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி பறித்த இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:51 pm

DIN

கூலி தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி செல்லிடப்பேசி பறித்த இரு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கெம்பட்டி காலனி பகுதியைச் சோ்ந்தவா் தீப்சந்த் படேல் (24). கூலி தொழிலாளியான இவா் வைசியாள் வீதி பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இருவா் தாங்கள் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி தீப்சந்த் படேலின் செல்லிடப்பேசியைப் பறித்தனா்.

அப்போது தீப்சந்த் படேல் எழுப்பிய சப்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினா் திரண்டு வழிப்பறியில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து பெரியகடை வீதி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட இருவரும் 17 வயது சிறுவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்து சிறாா் சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.