47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோவையில் ஒற்றை யானை தாக்கி இளைஞர் சாவு  

கோவையில் தோட்டத்து வேலை முடித்துவிட்டு வீடுதிரும்பிய இளைஞரை ஒற்றை யானை தாக்கியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

News image
கோப்புப்படம்
Updated On :24 செப்டம்பர் 2020, 6:51 am

DIN

கோவையில் தோட்டத்து வேலை முடித்துவிட்டு வீடுதிரும்பிய இளைஞரை ஒற்றை யானை தாக்கியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகம், கோபநாரி பிரிவு, கோபநாரி கிழக்கு சுற்றுக்கு உட்பட்ட கோபநாரி காப்பு காட்டை ஒட்டியுள்ள மூணுகுட்டை  செல்லும் வழியில் புதன்கிழமை மாலை அகழி மட்டத்துகாடு பகுதியைச் சார்ந்த ரவி என்பவரது மகன் ஞானபிரகாஷ்( 31), நண்பர் அருண்குமார்  இருவரும் தங்கவேலு என்பவர்க்கு சொந்தமான தோட்டத்தில் தோட்ட வேலையை முடித்து விட்டு தங்களது இருசக்கர வாகனத்தில் வரும்போது ஒற்றை ஆண் வழிமறித்து தாக்கியுள்ளது. 
இதில் ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். நண்பர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் காரமடை காவல்துறையினர் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.